ஷா ஆலம், ஜூலை 5– பண்டார் பாரு கிள்ளான் தொகுதி மக்களுக்கு இன்று தொடங்கி வரும் 11 ஆம் தேதி வரை இலவச மருத்துவ மற்றும் ஆலோசக சேவை வழங்கப்படவுள்ளது.
தொகுதியிலுள்ள அனைவருக்கும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்படுவதாக தொகுதி உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.
பண்டார் பாரு கிள்ளான் தொகுதி சேவை மையம் மற்றும் கிளினிக் மெடிக் சூரியா ஏற்பாட்டில் இந்த இலவச மருத்துவ சேவை வழங்கப்படுவதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
தொகுதி மக்களின் உடலாரோக்கியத்தை பாதுகாக்கும் அதேவேளையில் அவர்களின் நிதிச்சுமையைக் குறைக்கும் நோக்கிலும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று குறிப்பிட்டார்.