ஷா ஆலம் ஆக, 2- நாட்டில் நேற்று கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை 15,764 ஆக குறைந்துள்ளது. நேற்று இந்த எண்ணிக்கை 17,150 ஆக இருந்தது.
சிலாங்கூரில் 6,067 பேர் இந்நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
இதர மாநிலங்களில் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் வருமாறு- கோலாலம்பூர்(1,536), ஜோகூர் (1,222), சபா (1,166), சரவா (411), நெகிரி செம்பிலான்(862), கெடா (1,108), பினாங்கு (667), கிளந்தான் (552), பேராக் (748), மலாக்கா (463), பகாங் (475), திரங்கானு (425), லபுவான் (7), புத்ரா ஜெயா (46), பெர்லிஸ் (9).