கோலாலம்பூர், ஆக 9- இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாக பெற்றவர்களுக்கான பொருளாதார துறை சம்பந்தபட்ட தளர்வுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் கூறினார். அந்த தளர்வுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு வருவதோடு தேசிய பாதுகாப்பு மன்றத்திலும் பரிசீலிக்கப்படுவதாக அவர் சொன்னார். இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாக பெற்றவர்களுக்கு வழங்கப்படும் தளர்வுகள் குறித்து உள்ளூர் தொலைக்காட்சி வழி வெளியிட்ட அறிவிப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2021/08/pvc-pel.klang_-960x640.jpg)