ஷா ஆலம், ஆக 27– நாட்டில் நேற்று 24,599 சம்பவங்களுடன் புதிய உச்சம் தொட்ட கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று சற்று தணிந்து 22,070 ஆக ஆனது.
சிலாங்கூரிலும் இந்நோய்த் தொற்று எண்ணிக்கை சுமார் 1,000 குறைந்து 5,920 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
இதனை அடுத்து சபா மாநிலத்தில் மிக அதிகமாக அதாவது 3,010 சம்பவங்கள் பதிவான வேளையில் சரவா மாநிலத்தில் 2,224 பேர் இந்நோய்த் தொற்றுக்கு ஆளானதாக அவர் தெரிவித்தார்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவிட்-19 சம்பவங்களைப் பதிவு செய்த மாநிலங்கள் பட்டியலில் கெடா (2,072), பினாங்கு (1,829), ஜொகூர் (1,809), கோலாலம்பூர் (1,068), கிளந்தான் (1,051) ஆகிய மாநிலங்கள் உள்ளதாக அவர் சொன்னார்.
இதர மாநிலங்களில் நோய்த் தொற்று எண்ணிக்கை வருமாறு-
பேராக் (939), பகாங் (610), மலாக்கா (589), திரங்கானு (488), நெகிரி செம்பிலான் (338), பெர்லிஸ் (76), புத்ரா ஜெயா (39), லபுவான் (8).