ஷா ஆலம், அக் 1- நாட்டில் இன்று 11,889 கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. நேற்று இந்த எண்ணிக்கை 12,735 ஆக இருந்தது.
சிலாங்கூரிலும் நோய் கண்டவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இம்மாநிலத்தில் நேற்று 1,940 ஆக இருந்த நேர்வுகளின் எண்ணிக்கை இன்று 1,568 ஆக இறக்கம் கண்டுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
நோய் பாதித்த மாநிலங்களில் சரவா தொடர்ந்து முன்னலை வகிக்கிறது. இங்கு 2,413 பேருக்கு நோய்த் தொற்று அடையாளம் காணப்பட்ட வேளையில் ஜொகூரில் 1,217 பேர் பாதிக்கப்பட்டனர்.
இதர மாநிலங்களில் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு-
பேராக் (959), சபா (872), கிளந்தான் (858), பகாங் (831), பினாங்கு (779), கெடா (710), திரங்கானு (699), மலாக்கா (378), கோலாலம்பூர்(289), நெகிரி செம்பிலான் (197) பெர்லிஸ் (81), லபுவான் (36), புத்ரா ஜெயா (2).