ஷா ஆலம், அக் 30- சிலாங்கூர் உள்பட அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் 5ஜி அலைக்கற்றை 36 விழுக்காடாக அதிகரிக்கபடும். ஜோகூர், பினாங்கு, சபா மற்றும் சரவா ஆகிய மாநிலங்களிலும் 5ஜி அலைக்கற்றை வசதி மேம்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் டத்தோஸ்ரீ ஜப்ருள் துங்கு அப்துல் அஜிஸ் கூறினார். பி.பி.ஆர். எனப்படும் மக்கள் வீடமைப்புத் திட்டக் குடியிருப்பாளர்களும் இத்திட்டத்தில் கைவிடாததை உறுதி செய்யும் வகையில் 40 பி.பி.ஆர். குடியிருப்புகளில் இணைய வசதியை ஏற்படுத்துவதற்கு மூன்று கோடி வெள்ளி செலவிடப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். இலக்கவியல் இடைவெளியைக் குறைப்பதற்கும் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் இந்த 5ஜி அலைக்கற்றை உதவும் என்று நாடாளுமன்றத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அவர் குறிப்பிட்டார்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2019/12/Taman-Monumen-Kebangsaan-Monas-960x720.jpg)