மலாக்கா, நவ.20- நேற்று நடைபெற்ற மலாக்கா மாநிலத் தேர்தலில் மொத்தமுள்ள 28 இடங்களில் 15 இடங்களில் வெற்றி பெற்று பாரிசான் நேஷனல் (பிஎன்) கட்சி ஆட்சி அமைத்துள்ளது.
இது இரவு 9.42 மணி நிலவரப்படி முடிவுகள் என்று தேர்தல் ஆணையத்தின் (EC) தலைவர் டத்தோ அப்துல் கானி சலே தெரிவித்தார்.
"பிஎன் போட்டியிட்ட 28 இடங்களில் 15 இடங்களை வென்றுள்ளது, இதனால் போட்டியிட்ட இடங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பெரும்பான்மையைப் பெற்றுள்ளது" என்று அவர் இங்கு மெனாரா பெர்சகுத்துவானில் கூறினார்.
தேர்தலுக்கான வாக்குப்பதிவு சுமூகமாக நடந்ததாக அப்துல் கனி கூறினார்.