ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

மலேசியாவில் முதலாவது ஒமிக்ரோன் சம்பவம் பதிவு

ஷா ஆலம், டிச 3- மலேசியாவில் முதலாவது ஓமிக்ரோன் நோய்த் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஈப்போவிலுள்ள தனியார் உயர்கல்விக்கூடத்தில் பயிலும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மாணவர் இந்நோய்த் தொற்றுக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் இதனைத் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அந்த மாணவருக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கோவிட்-19 சோதனை மேற்கொள்ளப்பட்டு கடந்த மாதம் 19 ஆம் தேதி அவருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Pengarang :