கோலாலம்பூர், டிச 11- நாட்டிலுள்ள 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 86.9 விழுக்காட்டினர் அல்லது 27 லட்சத்து 35 ஆயிரத்து 048 பேர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.
மேலும 90.2 விழுக்காட்டினர் அல்லது 28 லட்சத்து 39 ஆயிரத்து 145 இளையோர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.
இது தவிர பெரியவர்களில் 97,2 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 27 லட்சத்து 84 ஆயிரத்து 472 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ள வேளையில் 98.6 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 30 லட்சத்து 78 ஆயிரத்து 880 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நேற்று நாடு முழுவதும் 123,868 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 3,930 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 6,613 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் 113,325 பேர் ஊக்க்த தடுப்பூசியையும் பெற்றனர்.
இதன் வழி பிக் எனப்படும் கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 5 கோடியே 47 லட்சத்து 48 ஆயிரத்து 772 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.