ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இரத்த தானம் செய்ய பொது மக்களுக்கு தேசிய இரத்த மையம் வேண்டுகோள்

ஷா ஆலம், டிச 18- பள்ளி விடுமுறை மற்றும் பெருநாள் காலங்களில் இரத்தக் கையிருப்பு குறையும் சாத்தியம் உள்ளதால் அதனை ஈடு செய்யும் விதமாக இரத்த தானம் செய்யும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தலைநகரில் உள்ள தேசிய இரத்த மையத்திலும் நாடு முழுவதும் உள்ள இரத்த வங்கிகளிலும் இரத்த தானம் செய்யலாம் என்று தேசிய இரத்த மையம் அறிக்கை ஒன்றில் கூறியது.

இரத்த தானம் செய்வது தொடர்பான  மேல் விபரங்களை தேசிய இரத்த மையத்தின்   வாயிலாக அறிந்து கொள்ளலாம்.


Pengarang :