ஷா ஆலம், டிச 27- மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான பதிவும் வெ.1,000 நிதி பகிர்ந்தளிப்பும் வரும் புதன்கிழமை கிழமை முதல் கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். பொது மற்றும் தனியார் தற்காலிக நிவாரண மையங்களில் தங்கிருந்தவர்கள், இடம் பெயராதவர்கள் அல்லது துயர் துடைப்பு மையங்கள் தவிர்த்து இதர இடங்களில் தங்கியிருந்தவர்கள் ஆகிய மூன்று பிரிவினர் இந்த உதவித் தொகையைப் பெற தகுதி உள்ளவர்கள் என்று அவர் சொன்னார்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2021/12/PC-MB8-960x620.jpg)