ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTPENDIDIKAN

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுக் கூடைகளை அன்வார் வழங்கினார்

ஷா ஆலம், டிச 31- வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் மஹாசிஸ்வா ஹராப்பன் எனப்படும் இளம் பட்டதாரி மாணவர்கள் அடங்கிய தன்னார்வலர் குழு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவருமான அவர் அந்த தன்னார்வலர் குழுவிடம் உணவுக் கூடைகளை நேற்று ஒப்படைத்தார். இங்குள்ள செக்சன் 22, கம்போங் கெபுன் பூங்காவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த உணவுக் கூடைகள் விநியோகிக்கப்படும்.

உணவுக் கூடைகளை வழங்கி உதவிய டத்தோஸ்ரீ அன்வாருக்கு தாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அந்த தன்னார்வலர் குழு கூறியது.

டாமன்சாரா ஆற்றோரம் அமைந்துள்ள கம்போங் கெபுன் பூங்கா, கடந்த 18 ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாக விளங்குகிறது. அப்பகுதியில் உள்ள வீடுகளின் கூரை வரை வெள்ளம் ஏறியது.


Pengarang :