கோலாலம்பூர், ஜனவரி 25: நேற்று பெய்த இடியுடன் கூடிய கனமழையால் தலைநகரைச் சுற்றியுள்ள ஐந்து பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன, ஆனால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையம், மாலை 4 மணியளவில் சம்பவம் நடந்த பகுதி செகோலா ரெண்டா வாங்சா ஜெயா பிரிவு 4 வாங்சா மாஜு, கோம்பாக் டோல் பிளாசாவுக்கு முன் காரக் நெடுஞ்சாலை, அம்பாங் எம்.ஆர்.ஆர் 2 பாலம், பிஎஸ்என் ரெஜாங் ஸ்தாபாக் ஜெயா மற்றும் ஜாலான் பாடாங் தேம்பாக் ஆகிய இடங்களுக்கு அருகில் இருந்ததாகத் தெரிவித்தனர்..
இந்தச் சம்பவத்தால் மரங்களை மோதியதாலும், போக்குவரத்திற்கு இடையூறாகவும் இருந்ததால் ஆறு வாகனங்கள் சேதமடைந்தன.
பாதையில் மரம் வெட்டும் பணி மாலை 5.51 மணியளவில் நிறைவடைந்தது என்று அறிக்கையில் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலுள்ள தீயணைப்பு வீரர்கள் விழுந்த மரங்களை அகற்றினர்.