ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சீனப்புத்தாண்டை மிதமாகக் கொண்டாடுவீர்- சிலாங்கூர் சுல்தான் தம்பதியர் வாழ்த்து

ஷா ஆலம், பிப் 1– சீனப் புத்தாண்டை மிதமான அளவில் கொண்டாடும்படி
மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் மற்றும் தெங்கு பெர்மைசூரி
சிலாங்கூர் தம்பதியர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்க நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக
நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) முறையாக கடைபிடிக்கும்படி சுல்தான்
ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் மற்றும் தெங்கு பெர்மைசூரி
நோரஷிகின் தம்பதியர் சீனப்புத்தாண்டை கொண்டாடும் அனைவருக்கும்
நினைவுறுத்தினர்.

இத்தகைய விழாக்களின் மூலம் இனங்களுக்கிடையே ஒருமைப்பாடு,
சகிப்புத்தன்மை, நல்லிணக்கம் மேலோங்கும் என்றும் அவர்கள்
நம்பிக்கைத் தெரிவித்தனர்.

அடுத்த தலைமுறையினரும் பின்பற்றுவதற்காக வழி வழியாக
கடைபிடித்து வரும் இந்த பாரம்பரியம் தொடரப்பட வேண்டும் என்று அரச
அலுவலகத்தின் பேஸ்புக் வாயிலாக வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்
அவர்கள் கூறினர்.

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள அனைத்து சீன சமூகத்தினருக்கும் எங்களின்
சீனப்புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் அந்த
பதிவில் தெரிவித்தனர்.


Pengarang :