ஷா ஆலம், பிப் 7– நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று 11,034 ஆக உயர்வு கண்டது. நேற்று இந்த எண்ணிக்கை 10,089 ஆகப் பதிவாகியிருந்தது.
கடந்த வாரம் முதல் நாட்டில் கோவிட்-19 எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை இது காட்டுகிறது.
நேற்று முன்தினம் 9,117 பேரும் கடந்த வெள்ளிக்கிழமை 7,234 பேரும் வியாழக்கிழமை 5,720 பேரும் இந்நோயினால் பாதிக்கப்பட்டனர். நோய்த் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் 10,000 பேருக்கு 33 பேர் என்ற எண்ணிக்கையில் சிலாங்கூர் ஆறாவது இடத்தில் உள்ளதாக கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.
புத்ரா ஜெயா, மலாக்கா, நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளன.