ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

புதிய உச்சத்தைத் தொட்டது கோவிட்-19: இன்று 27,831 பேர் பாதிப்பு

கோலாலம்பூர், பிப் 16 – நாட்டில் இன்று  கோவிட் -19 எண்ணிக்கை புதிய உச்சம் தொட்டு  27,831ஆகப் பதிவானது.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து மிக அதிகமாக பதிவு செய்யப்பட்ட  தொற்று எண்ணிக்கை இதுவாகும்.

இன்று பதிவான நோய்த் தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் இந்நோயினால் பாதிக்கப்பட்டவவர்கள் எண்ணிக்கை  31 லட்சத்து 11 ஆயிரத்து 514 ஆக உயர்ந்துள்ளது.

புதிய தொற்றுகளில் 99.65 விழுக்காடு அல்லது 27,734  லேசான நோய்த் தாக்கம் கொண்ட ஒன்றாம் மற்றும் இரண்டாம் வகையைச் சேர்ந்தவை என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.


Pengarang :