ஷா ஆலம், மார்ச் 16: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிலாங்கூர் பங்கிட் (பிஎஸ்பி) உதவித் தொகை வழங்குவது இம்மாத இறுதிக்குள் முடிவடையும் என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.
மீதமுள்ள விநியோகத்தில் கிள்ளான், கோலா லங்காட் (530), பெட்டாலிங் (348), சிப்பாங் (223), கோலா சிலாங்கூர் (56), கோம்பாக் (இரண்டு) ஆகிய இடங்களில் 7,236 உள்ளவர்கள் என்றார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
உதவி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாதது மற்றும் ஒன்றுக்கொன்று மேலெழுதல் போன்ற பல காரணங்களால் மொத்தம் 2,942 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.
“இன்னும் 300 விண்ணப்பங்கள் தகுதியுடையதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது,” என்று இன்று சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தில் போர்ட் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிசாம் ஜமான் ஹுரியின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
டிசம்பர் 18 ஆம் தேதி பல மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து பிஎஸ்பி திட்டத்தைத் தொடங்குவதற்கு மாநில அரசு கடந்த ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி RM10 கோடியை வழங்கியது.
உள்கட்டமைப்பு மறுவாழ்வு தவிர, வெள்ளத்தால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு RM10,000 உதவியும், வீடுகளை மறுசீரமைக்கக் குடும்பத் தலைவர்களுக்கு RM1,000 உதவியும் இந்த ஒதுக்கீட்டில் அடங்கும்.
உதவி பெறத் தகுதியுடைய நபர்கள் மூன்று வகைகளில் அடங்குவர், அதாவது அரசாங்க மற்றும் அரசு சார்பற்ற இயக்கங்களின் தற்காலிக தங்கும் மையங்களுக்குச் சென்ற பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் தங்கள் வீட்டிலேயே இருந்தவர்கள் என்றார் அவர்.