ECONOMYPBTSELANGOR

வார இறுதியில் நான்கு இடங்களில் சிலாங்கூர் அரசின் மலிவு விற்பனை

ஷா ஆலம், ஏப் 14- சிலாங்கூர் அரசின் மக்கள் பரிவு விற்பனைத் திட்டம் இவ்வார இறுதியில் மேலும் நான்கு இடங்களில் நடைபெறவுள்ளது.

சுங்கை பெசார், டத்தாரான் தொங்காக் 9  மற்றும் சிகிஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் சேவை மைய வளாகம் ஆகிய இடங்களில் வரும் சனிக்கிழமை இந்த மலிவு விற்பனை இயக்கம் நடைபெறும்.

ஞாயிற்றுக் கிழமையன்று காஜாங், தாமான் ஜெனாரிஸ் குடியிருப்பாளர் சங்க நடவடிக்கை மையம் மற்றும் உலு லங்காட், பெக்கான் பத்து 14, காம்பளெக்ஸ் பெங்குளு முக்கிம் உலு லங்காட் ஆகிய இடங்களில் இவ்வியக்கம் நடத்தப்படும்.

இந்த நான்கு இடங்களிலும் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை இந்த மலிவு விற்பனை இயக்கம் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மலிவு விற்பனையின் போது பொது மக்கள் இரண்டு கிலோவுக்கும் குறையாத கோழிகளை 12.00 வெள்ளி விலையில் வாங்கலாம் என்று பி.கே.பி.எஸ். எனப்படும் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் கூறியது.

இது தவிர, இறைச்சி, மீன், சமையல் எண்ணெய்  ஆகிய பொருள்களும் மலிவான விலையில் விற்கப்படும். சுற்று வட்டார மக்கள் இந்த அரியா வாய்ப்பை பயன்படுத்தி மலிவான விலையில் பொருள்களை வாங்கி பயனடையுமாறு  தனது பேஸ்புக் பதிவில் பி.கே.பி.எஸ். கேட்டுக் கொண்டது.

பொருள் விலையேற்றம் காரணமாக சிரமத்தை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு உதவும் நோக்கில் வரும் நோன்பு பெருநாள் வரை மாநிலத்தின் 64 இடங்களில் இந்த மலிவு விற்பனை இயக்கத்தை மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.


Pengarang :