MEDIA STATEMENTSELANGOR

சாலை விபத்தில் போலீஸ்காரர் பலி- ஜென்ஜாரோமில் சம்பவம்

கோலாலம்பூர், ஏப் 18- ஜென்ஜாரோம், ஜாலான் கம்போங் சீடிங்கில் நேற்று மாலை 4.45 மணியளவில் நிகழ்ந்த விபத்தில் போலீஸ்காரர் ஒருவர் பலியானார். அவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஜீப் ஒன்றுடன் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

புக்கிட் பூச்சோங் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் கார்ப்ரல் முகமது நஸ்ரி முகமது நோர் (வயது 31) நேற்று மாலை 4.00 மணிக்கு வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அப்துல் காலிட் ஓத்மான் கூறினார்.

தலையில் பலத்தக் காயங்களுக்குள்ளான முகமது நஸ்ரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் சவப்பரிசோதனைக்காக பந்திங் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
ஒன்பது ஆண்டுகளாக காவல் துறையில் பணியாற்றி வரும் அவருக்கு மனைவி உள்ளதாக ஏசிபி அப்துல் காலிட் சொன்னார்.

இந்த விபத்தில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் ஜீப்பின் ஓட்டுநர் இன்னும் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யவில்லை எனக் கூறிய அவர், இச்சம்பவம் குறித்த தகவலறிந்தவர்கள் கோல லங்காட் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் கெய்ஷா நோர் அஸாலியா பெத்தி சாரானை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.


Pengarang :