ஷா ஆலாம், மே 9: வியட்நாமின் ஹனோய் நகரில் இன்று நடைபெற்ற 31வது சீ விளையாட்டுப் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற தேசிய விளையாட்டு வீரர்களுக்கு டத்தோ மந்திரி புசார் வாழ்த்து தெரிவித்தார்.
இந்த வெற்றி அனைத்து மலேசியர்களின் லட்சியம் என்றும் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
“377.70 புள்ளிகளை பதிவு செய்து, ஆண்டுக்கான ஸ்பிரிங் போர்ட் (SPRINGBOARD) தனிநபர் முக்குளிப்பு இறுதிப் போட்டியில் நாட்டின் மூன்றாவது தங்கப் பதக்கத்தை வென்றதற்காக ஓய் ஷி லியாங்கை மந்திரி புசார் வாழ்த்தினார்.
பெண்களுக்கான மூன்று மீட்டர் பேட்டியில் நான்காவது தங்கப் பதக்கத்தை வென்ற இங் யான் யீ மற்றும் ஓங் கேர் யிங் ஆகியோருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.