ஷா ஆலம், மே 11- வியட்னாமில் நடைபெறும் 31வது சீ போட்டியின் மூன்று மீட்டர் உயரத்திலிருந்து நீரில் குதிக்கும் பிரிவில் மலேசிய நீச்சல் வீரரான முகமது ஷியாபிக் தங்கப் பதக்கம் வென்றார்.
முகமது ஷியாபிக்குடன் சேர்த்து இப்பிரிவில் மலேசிய விளையாட்டாளர்கள் ஏழு தங்கப் பதக்கங்களை இதுவரை வென்றுள்ளனர். இப்போட்டிக்காக ஒதுக்கப்பட்டுள்ள அனைத்து எட்டு தங்கப் பதக்கங்களையும் வெல்ல மலேசியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
இப்போட்டியில் மற்றொரு மலேசிய விளையாட்டாளரான கேப்ரியல் கில்பர்ட் டாயிம் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.