ஷா ஆலம், 25 மே: சிலாங்கூர் மற்றும் பிற மாநிலங்களில் இன்று மதியம் 1 மணி வரை இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசியதால் பல இடங்களில் திடீர் வெள்ள ஏற்பட வாய்ப்புள்ளது.
பேஸ்புக்கில் கிடைத்த தகவல் படி, சிகிஞ்சான் சபா பெர்ணம் பகுதிகளில் கனத்த மழை, கிள்ளான் ஆற்றுப் படுகையில் நீர் அளவு உயர்ந்து காணப்படுவதாகவும், பெட்டாலிங் மாவட்டத்தில் சுங்கை டாமன்சரா , கிள்ளான் மாவட்டத்தில் சுங்கை ராசாவ் ஒட்டிய பகுதிகளிலும் , பண்டார் கிள்ளானும் வெள்ள மிரட்டலை எதிர்நோக்கியுள்ளதாக ஆறு, வடிகால் மற்றும் நீர் வளத் துறையின் வெள்ள எச்சரிக்கையில் குறிப்பிட்டுள்ளது.