ஷா ஆலம், மே 29;- கெஅடிலான் கட்சியின் 2022 ஆம் ஆண்டிற்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 22 தொகுதிகளில் போட்டியிட்ட பல முக்கியத் தலைவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
குறிப்பாக சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, ரபிஸி, ரம்லி, சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில், சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசா ஆகியோரும் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் அடங்குவர்.
இதனிடையே, உலு சிலாங்கூர் தொகுதியில் அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜூன் லியோ ஹிசியாட் ஹூய் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜனிடம் தோல்வி கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இத்தேர்தலில் திருப்பம் நிறைந்த மற்றொரு முடிவை கோல சிலாங்கூர் தொகுதி கண்டுள்ளது. இத்தொகுதியில் நடைபெற்ற நான்கு முனைப் போட்டியில் கெஅடிலான் கட்சி இளைஞர் பிரிவுன் முன்னாள் உதவித் தலைவர் தீபன் சுப்பிரமணியம் சட்டமன்ற உறுப்பினர் ஜூவாய்ரியா ஜூல்கிப்ளியைத் தோற்கடித்தார்.
சிலாங்கூர் மாநிலத்தில் கெஅடிலான் தொகுதி தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர்கள் வருமாறு-
கோம்பாக்- டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
ஷா ஆலம் – ரோட்சியா இஸ்மாயில்
உலு சிலாங்கூர்- டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன்
கோல சிலாங்கூர்- தீபன் சுப்பிரமணியம்
அம்பாங் – டாயிங் முகமது ரிடுவான் பாச்சோக்
பாண்டான்- ரபிஸி ரம்லி
சபாக் பெர்ணம்- அகமது முஸ்தாயின் ஓத்மான்
சுங்கை பெசார்- அஸார் அச்சேல்
தஞ்சோங் காராங் – முகமது யாஹ்யா மாட் ஷாரி
செலாயாங் – வில்லியம் லியோங் ஜின் கின்
உலு லங்காட் – எம். ராஜேந்திர குமார்
பாங்கி – ஜி. பாலமுரளி
பூச்சோங் – எம். அன்பரசன்
சுங்கை பூலோ – ஆர். சிவராசா
டாமன்சாரா – எலிசெபத் வோங்
சுபாங் – எம். பிரவின்
காப்பார் – அஜிஸி ஆயோப்
கிள்ளான் – அஸ்மிஸாம் ஜமான் ஜூரி
கோத்தா ராஜா – ஆர். குணராஜ் ஜோர்ஜ்
கோல லங்காட்- ஆர். ஹரிதாஸ்
சிப்பாங் – பொர்ஹான் அமான் ஷா