ECONOMYSELANGORSUKANKINI

எம்பிபிஜே விளையாட்டுப் போட்டிகள் இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன

ஷா ஆலம், மே 30: கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக இரண்டு ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்ட பெட்டாலிங் ஜெயா சிட்டி கவுன்சில் (எம்பிபிஜே) ஏற்பாடு செய்த தொழில்த்துறை  நட்பு போட்டி நேற்று மீண்டும் நடைபெற்றது.

19 வது பதிப்பின் அமைப்பு பல்வேறு அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களிடமிருந்து ஊக்கமளிக்கும் பங்களிப்பை பெற்றதாக ஊராட்சி மன்றம் தெரிவித்துள்ளது.

“இந்தப் போட்டியானது எம்பிபிஜே மற்றும் பெட்டாலிங் ஜெயாவில் தொழில், விருந்தோம்பல் மற்றும் வணிகம் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட வருடாந்திர திட்டமாகும்.

“இந்த போட்டியின் அமைப்பு தொழில்துறை பணியாளர்களை ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை வழிநடத்த ஊக்குவிக்கும் மற்றும் அவர்களின் ஓய்வு நேரத்தை விளையாட்டு நடவடிக்கைகளுக்கு திருப்ப  உதவுகின்றது ” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் அடங்கிய 44 அணிகளுடன் பெட்டாலிங் ஜெயா அரங்க வளாகத்தில் காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை போட்டி நடந்துது.

போட்டியிட்ட விளையாட்டு நிகழ்வுகளில் ஃபுட்சல், நெட்பால், செபாக் தக்ரோ மற்றும் பிங் பாங் ஆகியவை அடங்கும்.


Pengarang :