ECONOMYHEALTHMEDIA STATEMENT

கோவிட்-19 நோய்த் தொற்றினால் நேற்று 2,130 பேர் பாதிப்பு- ஒருவர் உயிரிழப்பு

ஷா ஆலம், ஜூன் 18- நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்று எண்ணிக்கை நேற்று சற்று அதிகரித்து 2,130 ஆகப் பதிவானது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 3,033 ஆக இருந்தது.

நேற்று பதிவான நோய்த் தொற்றுகளுடன் சேர்த்து இந்நோய்க்கு இதுவரை ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 45 லட்சத்து 36 ஆயிரத்து 795 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் நோய் தீவிரமாக உள்ளவர்களின் எண்ணிக்கை 25,626 ஆகும். அதில் 95.9 விழுக்காடு அல்லது 24,585 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் 993 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 35 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 13 பேர் பி.கே.ஆர்.சி. எனப்படும் கோவிட்-19 நோயாளிகளுக்கான தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று பதிவான ஒரு மரணச் சம்பவத்துடன் சேர்த்து கோவிட்-19 நோய்த் தொற்றினால் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35,731 ஆக உயர்ந்துள்ளது.


Pengarang :