Dato’ Menteri Besar, Dato’ Amirudin Shari berucap ketika Majlis Pelancaran Selangor Public Health Advisory Council (Selphac) dan Apresiasi Petugas Barisan Hadapan di Dewan Jubli Perak, Shah Alam pada 7 Jun 2022. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மக்களின் ஆரோக்கியத்தை மிகவும் திறம்பட பாதுகாக்கச் சிலாங்கூர் அரசுக்குப் பொது மருத்துவ ஆலோசனை குழு  உதவி.

ஷா ஆலம், ஜூன் 23: சிலாங்கூர் பொதுச் சுகாதார ஆலோசனைக் குழு (செல்பேக்)  அமைப்பின் மூலம் மாநில மக்களின் உடல்  நலத்தைத் திறம்படப் பாதுகாப்பதற்கு சிறப்பாக  நிறுவப்பட்டது.

இக்குழு புதிய யோசனைகளை  வழங்கி, மாநில மக்களின்  உடல் ஆரோக்கியத்தை மென்மேலும் வலுப்படுத்த  திட்டமிட முடியும் என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

“கோவிட்-19  தொற்று நோயின் போது  பெற்ற நிர்வாக அனுபவத்துடன், சிலாங்கூர் வெற்றியை அடைவதிலும், மக்களின் சிறந்த எதிர்காலத்திற்காக இக்குழு அர்ப்பணிக்கும்   என்று  நம்பிக்கை கொண்டுள்ளது என்றார்.

“இந்தத் திட்டமானது சுகாதார அமைச்சகத்தின் விருப்பத்திற்கு ஏற்ப உள்ளது, இது மாநில அளவில் ஆரோக்கியமான மலேசியா சமூகத்தை  தேசிய அளவில்   உருவாக்குவதை வலியுறுத்துகிறது,” என்று அவர் கூறினார்.

மாநிலத் தலைவர்கள், சிலாங்கூர் மாநிலச் சுகாதாரத்துறை, மேலும், பல்வேறு துறைகளில் உள்ள மருத்துவர்கள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய 15 உறுப்பினர்களைச் செல்பேக் என்ற  இக்குழு கொண்டுள்ளது.

கோவிட்-19 தடுப்பு பணி குழுவின் முன்னாள் உறுப்பினர்கள், தொழில்துறை சுகாதார  பிரதிநிதிகள், மலேசிய மருத்துவ சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுச் சுகாதார நிபுணர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளும் இதில் அடங்குவர்.


Pengarang :