ECONOMYMEDIA STATEMENT

தனது மனைவியையும் மூன்று மாத குழந்தையையும் கொன்ற நபர் நிர்வாணமாக நிலையில் கைது

ஜோகூர் பாரு, ஜூலை 5: இங்குள்ள பெர்மாஸ் ஜெயா பகுதியில் தனது மனைவி மற்றும் மூன்று மாத குழந்தையைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் ஒரு நபரை போலீசார் கைது செய்தனர், சில மணி நேரங்களுக்குப் பிறகு இருவருடைய உடல்கள் கம்போங் பாக்கார் பத்துவில் உள்ள அவர்களது வீட்டின் முன் கண்டெடுக்கப்பட்டன.

ஜோகூர் பாரு செலாத்தான் காவல்துறைத் தலைவர் ஏசிபி ரவூப் செலாமாட் கூறுகையில், 24 வயது இளைஞன் பிற்பகல் 2.45 மணியளவில் நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்றபோது கைது செய்யப்பட்டார், மேலும் அந்த நபரிடமிருந்து இறைச்சி வெட்டும் இயந்திரத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

இந்த சம்பவம் குறித்து மதியம் 12.42 மணியளவில் காவல்துறைக்கு தகவல் கிடைத்ததாகவும், குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் இங்கு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சம்பவம் குறித்த தகவல் தெரிந்த பொதுமக்கள், ஜோகூர் பாரு செலாத்தான் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் ஹாட்லைனை 07-2182323 என்ற எண்ணிலோ அல்லது விசாரணை அதிகாரி ஏஎஸ்பி ஆர் கதிரேஷை 013-4472909 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, ஒருவர் சாலையில் நிர்வாணமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

பாதிக்கப்பட்ட 26 வயது பெண் மற்றும் அவரது குழந்தை கழுத்தறுக்கப்பட்ட நிலையில் வீட்டின் முன் வாசலில் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டேன்,” என்று பாதிக்கப்பட்டவரின் தந்தை போலிசாரிடம் கூறினார்.

பாதிக்கப்பட்ட பெண்ணும் சந்தேக நபரும் திருமணமாகி ஓராண்டு தான் ஆகி இருப்பதாக நம்பப்படுகிறது.


Pengarang :