ECONOMYMEDIA STATEMENT

பாராங்கத்தியேந்தி வீட்டில் கொள்ளையிட முயற்சி- ஆடவனுக்கு போலீஸ் வலைவீச்சு

ஈப்போ, ஆக 12- சமீபத்தில் சமூக ஊடகங்களில்  பகிரப்பட்டு வரும் நகரின் மையத்தில் நிகழ்ந்த கொள்ளை முயற்சி மற்றும் திருட்டுச் சம்பவங்களில் தொடர்புடையவர் நம்பப்படும் முக்கிய சந்தேக நபராக நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கடந்த ஆகஸ்டு மாதம்  5 ஆம் தேதி இங்குள்ள தாமான் தாசேக் இண்ட்ராவில் உள்ள ஒரு வீட்டிற்குள் ஒரு சந்தேக நபர் கத்தியுடன் நுழையும் காட்சி சி.சி.டி.வி. எனப்படும் கண்காணிப்பு கேமராவில்  பதிவாகியுள்ளது என்று ஈப்போ மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி யஹாயா ஹாசன் கூறினார்.

அதிகாலை 6.40 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை போலீசார் தேடி வருகின்றனர்.  குற்றவியல் சட்டம் பிரிவு 393 இன் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

ஆடவன் ஒருவன் பாராங் கத்தியுடன் வீட்டின் கதவை நோக்கி ஓடுவதையும் வீட்டின் உரிமையாளர் மின்னல் வேகத்தில் கதவை மூடுவதையும் சந்தேக நபர் தரை விரிப்பில் கால் இடறி கீழே விழுந்து பின்னர் எழுந்து தப்பியோடுவதையும் அந்த 12 விநாடி காணொளி சித்தரிக்கிறது.


Pengarang :