ஷா ஆலம், ஆக 12- இந்தோனேசிய லோரி ஓட்டுநர் ஓருவர் தாம் ஓட்டிய லோரியினால் மோதுண்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் பூச்சோங் ஜாலான் சியேரா 1, கட்டுமானப் பகுதியில் நேற்று மாலை 5.30 மணியளவில் நிகழ்ந்தது.
பந்திங், கம்போங் ஜென்ஜாரோமைச் சேர்ந்த லாசேமான் துஜு (வயது 60) என்ற அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் கமாருள் அஸ்ரான் வான் யூசுப் கூறினார்.
அந்த ஆடவர் அக்கட்டுமானப் பகுதியில் லோரியை நிறுத்தி விட்டு அதன் வாயில் கதவை மூடிக்கொண்டிருந்த போது லோரி பின்னோக்கி நகர்ந்து அவரை மோதித் தள்ளியதாக வான் கமாருள் தெரிவித்தார்.
லோரியின் சக்கரத்தில் சிக்கிக் கொண்ட அந்த ஆடவரின் உடல் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் மீட்கப்பட்டது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த விபத்து தொடர்பில் 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் 41(1) பிரிவின் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.