ECONOMYNATIONALSUKANKINI

சுக்மா போட்டிக்கான ஏற்பாடுகள் 90 விழுக்காடு பூர்த்தி

கோலாலம்பூர், ஆக 26–  வரும் செப்டம்பர் மாதம் 16 முதல் 24 வரை நடைபெறவிருக்கும் 20வது சுக்மா போட்டிக்கான ஏற்பாடுகள் 90 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளது.

தொழில்நுட்பம், இடம் மற்றும் விளையாட்டாளர்களின் தயார் நிலை ரீதியான ஏற்பாடுகளும் சீரான முறையில் நடைபெற்று வருவதாக விளையாட்டு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டத்தோ ஜனா சந்திரன் முனியன் கூறினார்.

இந்த போட்டி விளையாட்டு சிறப்பான முறையில் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக பொதுமக்களின் பங்கேற்பை அதிகரிப்பதற்கான வியூகங்களை வகுத்து வருகிறோம். அமைச்சுகள், பள்ளிகள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக இந்நிகழ்வை பிரபலப்படுத்துவதும் இதில் அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.

சுக்மா போட்டியில் பங்கேற்கும் விளையாட்டாளர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் பொது மக்களின் ஒருமித்த ஆதரவை நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம் என அவர் தெரிவித்தார்.

நேற்று இங்கு தேசிய நிலையிலான மலேசிய லீக் விளையாட்டுப் போட்டியின் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

குறைந்த பட்சம் ஆறு மாநிலங்களின் பங்கேற்புடன் 426 போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :