ECONOMYMEDIA STATEMENT

பூர்வக்குடி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மூவர் மீது குற்றச்சாட்டு

குவாந்தான், ஆக 30 – இரண்டு வாரங்களுக்கு முன்பு 14 வயது பூர்வக்குடி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மூன்று பூர்வக் குடியினர் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.

ரோஸ்லி பாக்கர் ( வயது 29), ஹெல்மட் (வயது 22), மற்றும் முராத் அஹ்மத் (வயது 26), ஆகியோர் குற்றச்சாட்டை நீதிபதி ஷாருல் ரிசல் மஜித் முன் மறுத்து விசாரணை கோரினர்.

ஆகஸ்ட் 20 ஆம் தேதி காலை 11.15 மணிக்கும்  மறுநாள் காலை 7.00 மணிக்கும் இடையே புக்கிட் இபாம், முவாத்ஸாம் ஷா, ரொம்பினில் உள்ள பழைய கல்லறைக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர்கள் மூவர் மீதும் கூட்டாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டத்தின் 375பி பிரிவின் கீழ் அவர்கள் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுளளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்க இச்சட்டம் வகை செய்கிறது.

அச்சிறுமியைக் கொன்றதாக மற்றொரு குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளதால் அம்மூவருக்கும் ஜாமீன் அனுமதிக்கப்படவில்லை.


Pengarang :