ALAM SEKITAR & CUACAECONOMY

சபாக் பெர்ணமில் இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை

ஷா ஆலம், செப்டம்பர் 7: சிலாங்கூரில் உள்ள சபாக் பெர்ணம் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.

கெடாவில் உள்ள கோத்தா ஸ்டார், போகோக் சேனா, பாடாங் தெராப், யான், பெண்டாங், கோலா மூடா, சிக் மற்றும் பாலிங்; பேராக்கில் (கெரியன், லாரூட், மாத்தாங் மற்றும் செலாமா, உலு பேராக், கோலா கங்சார் , கிந்தா, கம்பார், பாகன் டத்தோ, ஹிலிர் பேராக், பாத்தாங் பாடாங் மற்றும் முவாலிம்) போன்ற பல இடங்களும் இதேபோன்ற நிலைமைகள் எதிர்பார்க்கப்படுகின்றன என்று நிறுவனம் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளது.

கிளந்தானில் ஜெலி மற்றும் தானா மேரா, பகாங்கில் (ரவூப்) மற்றும் ஜோகூரில் (பொந்தியன், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாரு) ஆகியவையும் அடங்கும்.

சரவாக்கில் கூச்சிங், செரியன், சமரஹான் (சிமுஞ்சன்), ஸ்ரீ அமன், சரிகேய், சிபு, முக்கா மற்றும் கபிட் (சோங்) மற்றும் சபாவில் உள்ள மேற்கு கடற்கரையில் (ரனாவ்), தவாவ் (தவாவ் மற்றும் குனாக்) மற்றும் சண்டகன்(தொங்கோட், கினாபதங்கன் மற்றும் சண்டகன்) ஆகியவை அடங்கும்.

மெட்மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழைப்பொழிவு ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லிமீட்டர் (மிமீ/ மணி நேரம்) அதிகமாக இருக்கும் என எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழை முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகிய கால எச்சரிக்கையாகும், இது ஒரு வெளியீட்டிற்கு ஆறு மணிநேரத்திற்கு மிகாமல் இருக்கும்.

சமீபத்திய மற்றும் உண்மையான தகவல்களுக்கு பொதுமக்கள் www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும், சமூக ஊடகங்கள் மற்றும் myCuaca செயலியைப் பதிவிறக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Pengarang :