ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

பாராம் நாடாளுமன்றத் தொகுதியில் 12 வாக்களிப்பு மையங்கள் திறக்கப்பட்டன

கூச்சிங், நவ 21- பதினைந்தாவது பொதுத் தேர்தலை முன்னிட்டு  சரவா மாநிலத்தின் பாராம் நாடாளுமன்றத் தொகுதியில் 12 வாக்களிப்பு மையங்கள் திறக்கப்பட்டன.

வாக்களிப்பு நேரம் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளை பொறுத்து காலை 7.30 மணி முதல் பிற்பகல் 12.30 அல்லது 2.00 மணி வரை நீடிக்கும் என்று தேர்தல் ஆணையத்தின் செயலாளர்  டத்தோ இக்மால்ருடின் இஷாக் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

மோசமான வானிலை காரணமாக அந்த தொகுதியிலுள்ள 194 வாக்களிப்பு மையங்களில் பதினொன்றில் வாக்களிப்பு நிறுத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் கடந்த சனிக்கிழமை கூறியிருந்தது.


Pengarang :