ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

கோலா சிலாங்கூர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 73 குடும்பங்கள் இன்னும் பிபிஎஸ்ஸில் உள்ளனர்

ஷா ஆலம், நவ 27: கோலா சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மொத்தம் 228 பேர் இன்று காலை 7 மணி நிலவரப்படி தற்காலிக தங்குமிடத்தில் (பிபிஎஸ்) உள்ளனர்.

பிபிஎஸ் செகோலா கெபாங்சான் (எஸ்கே) பண்டார் பாரு, பிபிஎஸ் எஸ்கே சுங்கை சிரே மற்றும் கோலா சிலாங்கூர் முனிசிபல் கவுன்சில் ஹால் (எம்பிகேஎஸ்) பெஸ்தாரி ஜெயா ஆகிய இடங்களில் 73 பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்கி உள்ளதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

பிபிஎஸ் எஸ்கே பண்டார் பாருவில் 30 குடும்பங்களைச் சேர்ந்த 92 பேர் உள்ளனர் என்று மாநில பேரிடர் மேலாண்மை குழு செயலகத்தின் தலைவர் முள்ளியடி அல்-ஹம்தி லாடின் கூறினார்.

“டேவான் எம்.பி.கே.எஸ். பெஸ்தாரி ஜெயாவில், 26 குடும்பங்களைச் சேர்ந்த 77 நபர்களுடன் ஒப்பிடுகையில் இப்பொழுது, 25 குடும்பங்களில் இருந்து 74 பேர் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர், ஆக எண்ணிக்கை குறைந்துள்ளது” என்று அவர் கூறினார்.


Pengarang :