ஈப்போ, நவ 29: பண்டார் மேரு ராயாவில் உள்ள ஒரு நடிகரின் உணவகத்தில் உடைத்து உள்புகுந்து உலோக உபகரணங்களை திருடியதாக சந்தேகிக்கப்படும் நபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
25 வயதுடைய சந்தேக நபர் செம்மோர், கிளேபாங் புத்ராவில் உள்ள ஒரு கடையில் பிற்பகல் 3.20 மணியளவில் கைது செய்யப்பட்டார் என்று ஈப்போ மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி யஹாயா ஹாசன் கூறினார்.
பெர்னாமாவை தொடர்பு கொண்டபோது, “கடை திருட்டு சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட புரோட்டான் பெர்சோனா ரக காருடன் அவர் கைது செய்யப்பட்டார்” என்று அவர் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து நேற்று மாலை 5.15 மணியளவில் 52 வயதான ஆண் நடிகரிடம் இருந்து காவல்துறைக்கு ஜெலாபாங் காவல் நிலையத்தில் புகார் கிடைக்கப் பட்டது.
சிறுநீர் பரிசோதனையில் சந்தேக நபருக்கு மெத்தம் பேட்டமைன் இருப்பது கண்டறியப்பட்டது என்றும், அவர் வேறு வழக்குகளில் ஈடுபட்டுள்ளாரா என்று போலீசார் விசாரித்து வருவதாகவும் யஹாயா கூறினார்.
“இந்த வழக்கு வெற்றிகரமாக தீர்க்கப்பட்டது மற்றும் குற்றவியல் சட்டத்தின் 457வது பிரிவின்படி மேலதிக விசாரணைக்காக சந்தேகநபர் நாளை ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விளக்கமறியலில் வைக்கப் படுவார்” என்று அவர் கூறினார்.
முன்னதாக, நடிகர் ஜூல் யாஹ்யாவின் வைரலான வீடியோவில், உணவகம் மூடிய பிறகு ஒரு நபர் வளாகத்திற்குள் நுழைந்து பல்வேறு உலோகப் பாத்திரங்களை வெளியே எடுப்பதை அவரது உணவகத்தில் உள்ள சிசிடிவியின் காட்சிகளைக் காட்டுகிறது.