ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இன்று இரவு வரை சிலாங்கூரில் பல இடங்களில் கனமழை எச்சரிக்கை

ஷா ஆலாம், ஜன 23: இன்று இரவு வரை கோலா சிலாங்கூர் உலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங், கோலா லங்காட், உலு லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மற்றும் பலத்த காற்றும் வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா, கெடா, பேராக், பகாங், சரவாக் மற்றும் சபாவில் உள்ள சில பகுதிகளுக்கும் இதே எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லிமீட்டர் (மி.மீ./மணி)க்கு அதிகமாக ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கும்  மேலாகப் பெய்யும்   என எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகியக் கால எச்சரிக்கை ஆகும். சமீபத்திய மற்றும் துல்லியமான  தகவல்களுக்குப் பொதுமக்கள்  http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது   myCuaca பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்யவும்.


Pengarang :