கோலாலம்பூர் ஜன 28 ;- இவ்வாண்டு தைப்பூச திருநாளுக்காக மலாயன் ரயில்வே 3 பகல் 2 இரவுகளுக்கு தொடர்ச்சியாக சிறப்பு 24 மணி நேர சேவையை பத்து மலைக்கு வழங்குகிறது.
இந்த சேவை பிப்ரவரி மாதம் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை பத்துமலை – கோலக் கிள்ளான் பயண பாதை மற்றும் சுங்கை காடுட் – பத்துமலை பயண பாதைகளுக்கு வழங்கப்படுகிறது.
அதே வேளையில் 12 வயதுக்கு குறைந்த சிறுவர்கள், முதியோர் மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கு 50 சதவீத கட்டண கழிவு உண்டு. எந்த நேரத்திலும் பயன்படுத்த ஏற்றார் போல் குறைந்த கட்டண 5 ரீங்கிட் கார்டுகளையும் எல்லா கே.டி. எம் நிலையங்களிலும் வாங்கலாம் என்று தைப்பூச பயணிகளுக்கு அது தெரிவித்துக் கொள்கிறது