A computer image created by Nexu Science Communication together with Trinity College in Dublin, shows a model structurally representative of a betacoronavirus which is the type of virus linked to COVID-19, better known as the coronavirus linked to the Wuhan outbreak, shared with Reuters on February 18, 2020. NEXU Science Communication/via REUTERS
ECONOMYHEALTHMEDIA STATEMENT

நாட்டில் நேற்று 186 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று- ஒருவர் மரணம்

ஷா ஆலம், பிப் 20- நாட்டில் நேற்று புதிதாக 186 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் ஐவர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களாவர்.

கோவிட்-19 நோய்த் தொற்றுடன் தொடர்புடைய ஒரு மரணச் சம்பவம் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

இதனுடன் சேர்த்து இந்நோயினால் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36,956ஆக உயர்வு கண்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி நாட்டில் நேற்று 9,333 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றின் தீவிர தாக்கத்தை எதிர்கொண்டுள்ளனர். அவர்களில் 9,000 பேர் அல்லது 96.4 விழுக்காட்டினர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் 326 பேர்  மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில்  எழுவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் நால்வருக்கு செயற்கை சவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

கோவிட்-19  தொற்றிலிருந்து நேற்று குணமடைந்த 158 பேருடன் சேர்த்து இந்நோயிலிருந்து விடுபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 49 லட்சத்து 94 ஆயிரத்து 718 ஆக உயர்ந்துள்ளது.


Pengarang :