ANTARABANGSAECONOMYMEDIA STATEMENT

பெக்கான் பந்திங் ஞாயிறு சந்தை மற்றும் பந்திங் பொதுச் சந்தையை மந்திரி புசார் பார்வையிட்டார்

கோலா லங்காட், மார்ச் 5: டத்தோ மந்திரி புசார் இன்று காலை ஜெலஜா கித்தா சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தை முன்னிட்டு பெக்கான் பந்திங் ஞாயிறு சந்தை மற்றும் பந்திங் பொதுச் சந்தை ஆகியவற்றைப் பார்வையிட்டார்.

டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அங்கு வந்த பொதுமக்களுடன் நலன் விசாரித்ததுடன் உணவு மற்றும் அன்றாட தேவைக்கான பொருட்களை விற்கும் வியாபாரிகளுடன் 30 நிமிடம் செலவிட்டார்.

வர்த்தகர்களும் பொது மக்களும் மந்திரி புசாரின் வருகையால் உற்சாகமடைந்தனர். பின் அவர் கோலா லங்காட்டில் ஜெலஜா கித்தா சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.


Pengarang :