ECONOMYMEDIA STATEMENT

ரமலான் மாதத்தை முன்னிட்டு கம்போங் துங்கு தொகுதியில் 340 பேருக்கு 100 வெள்ளிக்கான பற்றுச் சீட்டு

ஷா ஆலம், மார்ச் 28– நோன்பு மாதத்தை முன்னிட்டு பெட்டாலிங் ஜெயா, ஸ்ரீ அமான் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த 340க்கும் மேற்பட்டவர்களுக்கு 100 வெள்ளிக்கான பற்றுச்சீட்டை கம்போங் துங்கு தொகுதி வழங்கியது.

இந்த பற்றுச்சீட்டு வழங்கும் நிகழ்வு கடந்த 25ஆம் தேதி நடைபெற்றதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லிம் யீ வேய் கூறினார். கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இத்தகைய நிகழ்வை தாங்கள் நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் 19ஆம் பிராந்தியத்திற்கான  பிரதிநிதி நலினா நாயரின் ஒத்துழைப்புடன் இந்த பற்றுச் சீட்டு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் மாநகர் மன்ற உறுப்பனிர் ஃபர்ஹான் ஹபிக்கின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் கடந்த 2019ஆம் ஆண்டில் முதன் முறையாக நடத்தப்பட்டது. இவ்வட்டாரத்தில் வசிப்பர்களில் பலர் ஏழைகளாக உள்ளதை கருத்தில் கொண்டு இதனை வருடாந்திர நிகழ்வாக நடத்தி வருகிறோம் என்றார் அவர்.

தொகுதி மற்றும் மாநகர் மன்ற உறுப்பினரின் மானியத்தைக் கொண்டு இன வேறுபாடின்றி அனைத்து வசதி குறைந்தவர்களுக்கும் இந்த பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :