ECONOMYSELANGOR

செராசில் நிகழ்ந்த சண்டையில் இருவர் படுகாயம்

கோலாலம்பூர், ஏப் 1- செராஸ், ஜாலான் முத்தியாராவில இன்று விடியற்காலை நிகழ்ந்த கைகலப்பில் இருவர் பாராங் கத்தியால் வெட்டப்பட்டு பலத்தக் காயங்களுக்குள்ளாயினர்.

இச்சம்பவம் தொடர்பில் 39 வயதுடைய உள்நாட்டுப் பெண் ஒருவர்  செராஸ், தாமான் ஸ்ரீ அமானில் இன்று காலை 7.30 மணியளவில் கைது செய்யப் பட்டதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஸாம் ஹலிம் ஜமாலுடின் கூறினார்.

இரு உள்நாட்டினர் சம்பந்தப்பட்ட கைகலப்பு தொடர்பில் செராஸ் போலீஸ் நிலையத்தின் குற்றச் செயல் தடுப்பு ரோந்துப் பிரிவு உறுப்பினர்களிடமிருந்து அதிகாலை 4.00 மணியளவில் தாங்கள் தகவலைப் பெற்றதாக அவர் சொன்னார்.

அந்த கைகலப்பில் அவ்வாடவர்களுக்கு கழுத்து மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டதாக அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய முதன்மைச் சந்தேகப்பேர்வழியாக கருதப்படும் எண். 241, ஜாலான் காராக், மெந்தாகாப், பகாங் எனும் முகவரியைச் சேர்ந்த ஹெரன்பால் சிங் ஹர்ஜான் சிங் என்பரைத் தாங்கள் தேடி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஆருடங்களை வெளியிட வேண்டாம் என பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :