பெட்டாலிங் ஜெயா, ஜூலை 22- தற்காலிக அடிப்படையில் வருமானம் ஈட்ட உதவும் உணவு விநியோகத் தொழில் ஈடுபட்டுள்ளவர்களை பிரதமர் டத்தோ அன்வார் இப்ராஹிம் இன்று இங்கு சந்தித்தார்.
இங்குள்ள பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிலாங்கூர் எக்ஸ் பெலியா பி-ஹெய்லிங் தெமு அன்வார் எனும் நிகழ்வில் பிரதமருடனான இச்சந்திப்பு நடைபெற்றது.
இந்நிகழ்வில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, இளைஞர் மேம்பாட்டு துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகம்மது கைருடின் ஓத்மான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இ-ஹெயிலிங் எனும் இத்துறையில் ஈடுபட்டுள்ள இளைஞர்களோடு அன்வார் செல்ஃபி எனப்படும் சுய படமும் எடுத்துக் கொண்டார்.
சுமார் ஒரு மணி நேரம் அவர்களுடன் உரையாடிய அன்வார், அவர்களிடம் பல்வேறு விஷயங்கள் குறிப்பாக உணவு பட்டுவாடா தொழில் குறித்து கேட்டறிந்தார்.