MEDIA STATEMENTSELANGOR

மேன்மை தங்கிய சுல்தான் தம்பதியினர் தீப ஒளியின் பிரகாசத்தில்  ஒற்றுமை உணர்வுகள் ஓங்க வாழ்த்தினர்.

ஷா ஆலம், நவ. 12: மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் மற்றும் சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி தீபாவளியைக் கொண்டாடும் அனைத்து இந்துக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் மற்றும் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் ஆகியோர் இந்த ஒளி விழா நல்லிணக்கம், மரியாதை மற்றும் ஒற்றுமையுடன் கொண்டாடப்படும் என்று நம்புகிறார்கள்.

சிலாங்கூர் அரச அலுவலகத்தின் முகநூலில் பகிரப்பட்ட அறிக்கையின்படி, “தீபாவளி பண்டிகையின் அடையாளமாக விளங்கும் ஒளியின் மிகுதியானது மலேசியாவில் இன ஒற்றுமையின் உணர்வை வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்வதில் தொடர்ந்து ஒளிரச் செய்யும்” என்றார்.


Pengarang :