MEDIA STATEMENTPBT

எம்.பி.கே. ஏற்பாட்டில் கிள்ளான் லிட்டில் இந்தியாவில் எலி ஒழிப்பு இயக்கம்

கிள்ளான், டிச 3- இங்குள்ள ஜாலான் தெங்கு கிளானா, லிட்டில் இந்தியா பகுதியில் எலிகளை ஒழிக்கும் இயக்கத்தை கிள்ளான் நகராண்மைக் கழகம் மேற்கொண்டது.

எலிகளின் பெருக்கத்தால் உணவகங்கள் மற்றும் வர்த்தக மையங்களில் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுவதையும்  நோய்ப் பரவலை தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த இயக்கம் மேற்கொள்ளப்பட்டதாக  நகராண்மைக் கழக உறுப்பினர் ப. யுகராஜா கூறினார்.

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ் மற்றும் பண்டமாரான் சட்டமன்ற உறுப்பினர்  தோனி லியோங் ஆகியோரின்  கோரிக்கையின்  பேரில் இப்பணி மேற்கொள்ளப்பட்டதாக கூறிய அவர், இப்பகுதியில் எலிகளைத் துடைத்தொழிக்கும் நடவடிக்கைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றார்.

எலிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம்  சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்தைப் பாதுகாப்பதையும் இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

நகராண்மைக் கழகத்தின் சுகாதாரத்துறை இயக்குநர் அஸ்மி முஜி மற்றும் லிட்டில் இந்தியா வர்த்தகச் சங்கத்தின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில்  மொத்தம் 83 இடங்களில் பசை தடவப்பட்ட எலிப்பொறிகள் வைக்கப்பட்டு 19 எலிகள் பிடிக்கப்பட்டன என்றார் அவர்


Pengarang :