செய்தி ; சு.சுப்பையை
சுங்கை பூலோ.டிச.17- சுங்கை பூலோ தமிழ் மெத்தடிஸ்ட் திருச்சபை சிறப்பு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை நடத்தியது. இந்த சிறப்பு கொண்டாட்டத்திற்கு சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினரும் துணை அமைச்சருமான டத்தோ ரமணன் அவர்கள் சிறப்பு பிரமுகராக அழைக்கப்பட்டிருந்தார். டத்தோ ரமணனின் சார்பில் அவரது நாடாளுமன்ற அதிகாரி தமிழ் செல்வன் கலந்து கொண்டார்.
2005 ஆம் ஆண்டு முதல் சுங்கை பூலோ வட்டாரத்தில் இத்திரு சபை ஊழியம் செய்து வருகிறது. வருடந்தோறும் கிறிஸ்துமஸ் முன்னிட்டு வசதி குறைந்தவர்களுக்கு சமையல் பொருட்கள் கொடுத்து உதவி வருகிறோம். அந்த வகையில் இவ்வாண்டும் 20 வசதி குறைந்த இந்திய குடும்பங்களுக்கு ரி.ம. 100.00 பெருமானமுள்ள பொருட்கள் வழங்கினோம் என்று இத்திரு சபையின் முதன்மை பொறுப்பாளர் அந்தோனி தெரிவித்தார்.