கோலாலம்பூர், மார்ச் 30 – நேற்றைய நிலவரப்படி 3 கோடியே 8 லட்சம் மலேசியர்களில் சுமார் 98 லட்சத்து 20 ஆயிரம் பேர் மத்திய தரவுத் தள மையத்தில் (பாடு) தங்கள் தகவல்களைப் புதுப்பித்துள்ளனர்.
‘பாடு’வின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தின்படி, சிலாங்கூர் மாநிலம் மிக அதிகமாக 15 லட்சத்து 60 ஆயிரம் பேரை பதிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து ஜோகூர் (11 லட்சம் பேர்), பேராக் (9 லட்சத்து 80 ஆயிரம் பேர்), சரவாக் (9 லட்சம் பேர் ), சபா (8.3 லட்சம் பேர் ), கெடா (7.6 லட்சம் பேர் ) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
கிளந்தானில் 6.7 லட்சம் பேரும் கோலாலம்பூரில் 5.7 லட்சம் பேரும் பினாங்கில் 5.6 லட்சம் பேரும் பகாங்கில் 5.5 லட்சம் பேரும் திரங்கானுவில் 4.6 லட்சம் பேரும் நெகிரி செம்பிலானில் 4.2 லட்சம் பேரும் மலாக்காவில் 3 லட்சம் பேரும் புத்ராஜெயாவில் 30 ஆயிரம் பேரும் லபுவானில் 20 ஆயிரம் பேரும் பதிவு செய்துள்ளனர்.
தங்கள் தரவை புதுப்பிக்காதவர்கள், நாளை (மார்ச் 31) தேதிக்கு முன், https://www.padu.gov.my என் அகப்பக்கத்தில் அல்லது அருகிலுள்ள பாடு முகப்பிடத்தில் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்