MEDIA STATEMENT

பிரதமர் தமிழ், விஷு புத்தாண்டு,  வைசாகி தினம் வாழ்த்துக்களை தெரிவித்தார்

கோலாலம்பூர், ஏப்ரல் 13: தமிழ்ப் புத்தாண்டு, வைசாகி மற்றும் விஷு பண்டிகையைக் கொண்டாடும், தமிழ்  மற்றும் மலையாள சமூகத்தினருக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

ஃபேஸ்புக்கில் ஒரு பதிவின் மூலம், அன்வார் இந்த புத்தாண்டு கொண்டாடுபவர்களுக்கு மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் தர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்.

“நமது நாட்டின் பலத்தின் முதுகெலும்பாக இருக்கும் ஒற்றுமையின் உணர்வுக்கு தொடர்ந்து ஒளியூட்டுங்கள்” என்று அவர் கூறினார்.


Pengarang :