PBTSELANGOR

பாதுக்காப்பு மருட்டலாய் இருக்கும் பெயர்பலகைகள் அகற்றப்படும்

பந்திங் – அனுமதியின்றியும் பொது மக்களின் பாதுக்காப்பிற்கும் மருட்டலாக விளங்கிடும் பெயர் பலகைகளை அகற்றும் நடவடிக்கையினை கோலா லாங்காட் மாவட்ட மன்றம் மேற்கொள்ளவிருப்பதாக அதன் தலைவர் முகமாட் சையின் ஹமிட் தெரிவித்தார்.

மாவட்ட மன்றத்தின் அனுமதியை பெறாமல்  விருப்பத்திற்கு ஆங்காங்கே பதாகைகளையும் பெயர் பலகையையும் அமைத்திருப்பதோடு அஃது பொது மக்களுக்கு அசொளவுகரியத்தை கொடுப்பத்தையும் சுட்டிக்காண்பித்த அவர் மாவட்ட மன்றத்தின் இந்த கோரிக்கையை ஏற்று சம்மதப்பட்டவர்கள் அதனை அகற்ற வேண்டும்.இல்லையேல் அவற்றை அகற்றும் நடவடிக்கையினை மாவட்ட மன்றம் மேற்கொள்ளும் என்றார்.

பெயர் பலகைகளை அமைப்பதற்கு முன்னர் சம்மதப்பட்டவர்கள் முறையான அனுமதியை பெற்றிருக்க வேண்டும் என்பதை நினைவுறுத்திய அவர் அனுமதி பெறாத மற்றும் பொது மக்களின் பாதுக்காப்பிற்கு மருட்டலாகவும் விளங்கிடும் பெயர் பலகைகள் அகற்றப்படும் என அவர் உறுதியாய் குறிப்பிட்டார்.

 

 


Pengarang :