ஷா ஆலம், ஜூலை 23:
சிலாங்கூர் மாநில மந்திரி பெசாரின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வு ஷா ஆலமில் அமைந்துள்ள அதிகாரப்பூர்வ இல்லத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. நாடு தழுவிய அளவில் சமுதாயத் தலைவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மந்திரி பெசார் பெறுநிறுவனம் (எம்பிஐ) ஏற்பாட்டில் மாலை 2 மணிக்கு தொடங்கிய விருந்தோம்பலில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் துணைத் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் மற்றும் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி மற்றும் டத்தின் ஸ்ரீ ஷாம்ஷிடார் தாஹாரின் வருகையாளர்களை வரவேற்று உபசரித்தனர். பல்வேறு சமூகங்களை சேர்ந்த தலைவர்கள் மந்திரி பெசாருடன் தம்படம் எடுத்துக் கொண்டனர்.