ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோல குபு பாரு தொகுதியை ஹராப்பான் கைப்பற்றும்- மந்திரி புசார் நம்பிக்கை

உலு சிலாங்கூர், ஏப் 27 -அடுத்த மாதம் நடைபெற இருக்கும்  இடைத்தேர்தல் கோல குபு பாரு தொகுதியை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கைப்பற்றும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

கோலா குபு பாருவில் அமல்படுத்தப்பட்ட இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் , சமூக நலத் திட்டங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான  முன்னெடுப்புகள் முந்தைய வெற்றிகளுக்கு முக்கிய காரணங்களாக இருந்தன என்று சிலாங்கூர் ஹராப்பான் தலைவருமான அவர் சொன்னார்.

வேட்பாளரின் தேர்வு ஒரு முக்கியமான காரணமாகும். இருப்பினும், முந்தைய மூன்று தவணைகளில்  ஹராப்பான் புரிந்த சாதனையையும் கருத்தில் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

நாங்கள் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல் படுத்தியுள்ளோம். மேலும், ஐ.எஸ்.பி.திட்டத்தின் மூலம் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளோம் என்றார் அவர்.

இந்த முயற்சிகள் யாவும்  இந்த இடைத்தேர்தலில் தொகுதியை நாங்கள் தக்க வைத்துக் கொள்வதற்கு பங்களிக்கும் என்று நான் நம்புகிறேன் என்று கோலா குபு பாரு தொகுதி  இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிகழ்வின் போது​​ செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

கோலா குபு பாரு இடைத்தேர்தல் வரும் மே 11ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில்  ஹராப்பான், பெரிக்காத்தான் நேஷனல்,  பார்ட்டி ராக்யாட் மலேசியா (பிஆர்எம்) மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஆகியோர் இடையே நான்கு முனைப் போட்டி நடைபெறுகிறது.


Pengarang :